Thursday, March 31, 2011

'தாழ்ப்பாளை *சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது. அப்படிச் செய்தா... வீட்டுல சண்டை வரும்.'

மேலோட்டமான பொருள்:


தாழ்ப்பாளை லொட்டு லொட்டுனு ஆட்டினால் ஆட்டும் சத்தம் பெரியவர்களை கோபப்படுத்தும் அவர்கள் தேவையில்லாமல் சபிப்பார்கள், திட்டி தீர்ப்பார்கள், அதனால் கதவின் தாழ்ப்பாளை ஆட்டும் குந்தையால் பெரியவர்களுக்குள் சண்டை வரும்.


உட்பொருள்:

அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும்

தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.


நுட்பமான பொருள்:

குழந்தைகளோடு விளையாட நேரம் செலவிட வேண்டும். குழந்தைகள் தொங்கி விளையாட ஆசைப்படுகிறது. பக்கத்தில் உள்ள பூங்காவிற்கு அழைத்து செல்லவும். சண்டை வராது மகிழ்ச்சி வரும்.


கவிப் பொருள்:

தாழ்ப்பாள் இல்லா கதவு

நினைவுகளின் இல்லத்தில்

தாழ்ப்பாள் ஏதும் இல்லை...

கதவு திறந்து தானிருக்கிறது

யாரும் ஆட்ட முடியாது!

No comments:

Post a Comment