Tuesday, April 5, 2011

அ, கர வரிசைல் ‘அ' பழமொழிகள்

· அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

· அகல உழுகிறதை விட ஆழ உழு.

· அகல் வட்டம் பகல் மழை.

· அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

· அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

· அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

· அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

· அடக்கமே பெண்ணுக்கு அழகு.

· அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

· அடாது செய்தவன் படாது படுவான்.

· அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.

· அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.

· அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.

· அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

· அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

· அந்தி மழை அழுதாலும் விடாது.

· அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

· அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.

· அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.

· அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

· அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.

· அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

· அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

· அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.

· அழுத பிள்ளை பால் குடிக்கும்.

· அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

· அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

· அறச் செட்டு முழு நட்டம் .

· அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

· அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.

· அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.

· அறமுறுக்கினால் அற்றும் போகும்.

· அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.

· அறிய அறியக் கெடுவார் உண்டா?

· அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

· அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

· அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

· அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

· அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

· அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்.

· அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

· அற்ப அறிவு அல்லற் கிடம்.

· அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

· அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?

· அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.

· அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

· அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

No comments:

Post a Comment