Wednesday, February 2, 2011

வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்.

மாமியார் ஒரு போதும் கழுதையாவதில்லை (சீரியல்களில் கிராஃபிக்ஸ் உதவியுடன் சிற்சில சமயங்களில் சாத்தியம் ). மனைவிகள் எப்போதாவது (செல்லமாக) அடி கழுதையே என வர்ணிக்கப்படுவதுண்டு.. அதுவும் கோபமாக இருக்கும் போது கழுதை என்று சொன்னால் அந்த இடத்தில் இரண்டு கழுதைகள் எண்ணிக்கையில் சண்டையாய் மாற வாய்ப்பிருக்கிறது (சொன்னவரையும் சேர்த்து ) ..

அறியாத விளக்கம் :
மேற்சொன்ன பழமொழியில் கழுதை என்பது கயிதை என வரவேண்டும் . கயிதை என்பது ஊமத்தம்காயை குறிக்கும். ஊமத்தம்பூ
அதன் ஆரம்ப பருவத்தில் மென்மையாய் வளர்ந்து அழகாய் பூத்து கடைசியில் காயில் கடின விஷமாய் முள்ளாய் மாறி
அவ்வப்போது துன்புறுத்துவது போல் மாமியார்கள் ஆரம்பகாலத்தில் அன்பாய் இருந்து பின் வம்பாய் வளர்ந்து கடைசியில்
வேம்பாய் கசப்பதுபோல் என்பது போல் வந்ததாலேயே இந்த பழமொழி தோன்றியது. (குறிப்பு : என் மாமியார் இண்டர்நெட்
பார்ப்பதில்லை.எனவே ஐயா விடு ஜுட் )

No comments:

Post a Comment