அறிந்த விளக்கம் :
மற்றவர்களுக்கு நாம் செய்யும் நன்மையின் தன்மை நம்மையும் நம் குடும்பத்தையும் அதே நன்மையின் தன்மை கொண்டு உயர்த்தும். ( ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்க்கும்.. உன் பிள்ளையை கொடைக்கானல் வளர்க்கும் அடி போடி என்று கடி'ப்பார் தம் மனைவியை கவுண்டமணி ஒரு படத்தில்.. )
அறியாத விளக்கம் :
ஊரான் பிள்ளை என்பது தம் மனைவியை குறிக்கும்.. அவள் பிள்ளை சுமந்திருக்கும் காலத்தில் அவளை அவள் கணவன்
நல்ல முறையில் பராமரிப்பான் எனில் அம்மனைவி வயிற்றில் வளரும் அவனது குழந்தையும் ஆரோக்கியமாக நலமுடன்
வளரும். ( உன்னைய நான் நெஞ்சிலே சுமப்பேன் என்னைய நீ வயித்தில சுமப்ப உலகமே நீதான் எனக்கு அழகம்மா என்று மனைவியை பார்த்து பாடும் பாடல் ஒன்று நினைவாடலில்...)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment