Tuesday, February 8, 2011

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

அறிந்த விளக்கம் :

மேற்சொன்ன பழமொழி கொஞ்சம் வஞ்(சி)சப் புகழ்ச்சியாக பெண்கள் மீது இடப்பட்ட கருத்தாக உலக வழக்கில் எடுத்துக் கொள்ளப்

படுகிறது. புராணங்களில் படிக்கும் போது அசுரனுக்கு வரம் தந்து வாழ்வளிக்கும் பெண் தெய்வங்கள் பின் அந்த அசுரனையே அழிக்க நேரிட்டதால் இப்பழமொழி வந்திருக்க கூடும் என்று ஒரு சாரார் கருதுகின்றனர்.

அறியாத விளக்கம் :

இப்பழமொழியில் இரண்டு விஷயங்கள் நளினமாய் மறைக்கப்பட்டுள்ளன. நல்லவை ஆவதும் பெண்ணாலே தீயவை

அழிவதும் பெண்ணாலே என்று வந்திருக்க வேண்டும். அவசர உலகில் பேசுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த பழமொழியில்

நல்லவை, தீயவை என்ற இரண்டு வார்த்தைகளும் மற(றை)க்கப்பட்டு ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று

வந்துவிட்டது.

No comments:

Post a Comment