அறிந்த விளக்கம் :
மேற்சொன்ன பழமொழி வெவ்வேறு வாழிடங்களில் வெவ்வேறு சமூகங்களில் வெவ்வேறு விதமாக சொல்லப்பட்டாலும்
எல்லோரும் கொள்ளும் பொருள் ஒன்றே ஒன்று. அது ஆமை என்ற உயிரினம் வீட்டுக்குள் வந்து விட்டால் அந்த வீடு
அழிவை நோக்கி போகும் அல்லது கெடுதல்கள் நிகழும். அமீனா என்பவர் நீதி மன்றத்தில் பணிபுரியும் சிப்பந்தி. (டவாலி என்பார்கள் ). நீதி மன்ற அறிக்கைகளை நம்மிடம் சேர்ப்பிப்பவர். வீடு ஏலம், நகை ஏலம் மற்றும் ஏதேனும் வில்லங்க விவரங்களை வீட்டுக்கு அது தொடர்பான அதிகாரிகளுடன் கொண்டு வந்து அறிவிப்பவர்.எனவே அவர் வீட்டுக்கு வந்தாலும் ஏதோ கெட்ட செய்திதான் கொண்டு வருவார் என்பதற்காக மேற்சொன்ன பழமொழி விளக்கம் தருகிறது. ( நன்றாக பாருங்கள் ஆமினா என்று வந்துவிட்டால் அந்த பெயர்உள்ள வீட்டில் உடம்பு ரணகளம் ஆக வாய்ப்பிருக்கிறது )
அறியாத விளக்கம் :
மேற்சொன்ன பழமொழியின் முதல் பாதியில் உள்ள ஆமை என்பது நாம் நினைப்பது போல் நாட்டு ஆமையோ ( நாட்டாமை
இல்லீங்க ) அல்லது கடல் ஆமையோ அல்ல. இது இங்கு மூன்று விதமான ஆமைகளை உணர்த்துகிறது.
1. ) கல்லாமை
2. ) இயலாமை
3. ) முயலாமை .
அதாவது கல்வி இல்லாத , சோம்பேறித்தனம் கொண்ட, முயற்சிகளற்ற தன்மைகள் எந்த வீட்டில் உள்ளனவோ அந்த வீடு
முன்னேறாது என்பதை அப்பழமொழி அறிவுறுத்துகிறது. அடுத்து இரண்டாம் பாதியாக உள்ள அமீனா புகுந்த வீடு என்பது ஒரு
எதுகை மோனைக்காக சேர்க்கப்பட்ட விஷயமாகவே தமிழாய்வாளர்கள் கருதுகிறார்கள். அமீனாவின் பணி என்னவோ அதைதான் அவன் செய்ய முடியும். அவன் வரும் இல்லம் ஏதும் விளங்காது எனில் அவன் அவன் சொந்த வீட்டுக்கு போவதெப்படி அல்லது உறவுக்காரர்கள் வீடுகளுக்கு செல்வதெப்படி...?

No comments:
Post a Comment